Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

போதைப்பொருள் பாவனை குறித்து இளையோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – ஜாட்சன் பிகிராடோ

ஏப்ரல் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கில் கரையோர பிரதேசங்களில் காணப்படும் போதைப்பொருள் பாவனை குறித்து இளையோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ

வடக்கில் கரையோர பிரதேசங்களில் காணப்படும் போதைப்பொருள் பாவனை குறித்து இளையோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி,போதைப்பொருள் பாவனையில் இருந்து இளையோரை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்தார்.

மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘போதைப்பொருள் வேண்டாம் நமது இளையோரை பாதுகாப்போம்’ எனும் தொனிப் பொருளில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (29) மன்னாரில் இடம் பெற்றது.

இதன் போது இளைஞர் யுவதிகள், திணைக்கள அதிகாரிகள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

வடக்கில் உள்ள கரையோரப் பகுதிகளை போதை பொருட்களின் மையங்களாக இலங்கையில் பார்க்கக்கூடிய ஏற்றுக்கொள்ள முடியாத விடையமாக இன்று காணப்படுகின்றது.

இந்த போதைப்பொருட்களை எமது இளையோர் சிறுவர்கள்,குறிப்பாக பாடசாலை சமூகத்தை சீரழிக்கக் கூடிய நிலையில் பரந்துபட்டு காணப்படுவதை நாங்கள் ஊடகங்கள் மூலம் பார்க்கின்றோம். போதை பாவனையை எவ்வாறு கட்டுப்படுத்துவது, அதில் இருந்து எவ்வாறு எமது இளையோர்களை பாதுகாப்பது என்பது குறித்து நாம் விழிப்புணர்வை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

அநீதிக்கு எதிராக நாங்கள் எவ்வாறு கூட்டாக குரல் கொடுப்பது?. தொழிவை பெற்றுக் கொள்ள வேண்டும். வடக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழிப்புணர்வை இளையோர் மத்தியில் முன்னெடுத்து வருகிறோம்.

அதனுடன் தொடர்புபட்டு கடமையாற்றுகின்றவர்களையும் உள்ளடக்கி கூட்டுக் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் போது தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் பசீர் முகமட் றசாக் கலந்து கொண்டு விழிப்புணர்வு கருத்துக்களை முன் வைத்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கனடாவின் பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி…
அடுத்த செய்தி மன்னார் மாவட்டத்தில் வள சுரண்டல்கள், அடக்கு முறைக்கு எதிராக மே தின ஊர்வலம்…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

அமெரிக்காவுக்கு எதிராக பிரிக்ஸ் பகிரங்க எச்சரிக்கை விடுப்பு

ஏப்ரல் 30, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் உலக நாடக விழா நிகழ்வு…

மார்ச் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் கடந்த 7 ஆண்டுகளின் பின்னர் மிக பக்தி உணர்வுடன் வழங்கிய திருப்பாடுகளின் காட்சி.

ஏப்ரல் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா மற்றும் கருணா அம்மான் உள்ளிட்ட நால்வருக்கு தடை விதித்தது பிரித்தானியா!

மார்ச் 24, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?