யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த இரட்டையர்களான யமுனாநந்தா பிரணவன் மற்றும் யமுனாநந்தா சரவணன் ஆகியோர் க.பொ.த உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் யாழ் மாவட்டத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களையும், தேசிய மட்டத்தில் மூன்றாம் மற்றும் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
குறித்த இரட்டையர்களை பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் இவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர்.யமுனாநந்தாவின் இரட்டை புதல்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.