இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், 2028 ஆம் ஆண்டு முதல் விண்கலங்கள் விண்ணில் செலுத்தப்பட்டு ஒருங்கிணைக் கப்படவுள்ளன.
இதனைச் செயற்படுத்த SPADEX என்னும் நுட்பத்தின் கீழ், விண்வெளியில் செயற்கைக் கோளை ஒருங்கிணைத்தல், விடுவித்தல் ஆகிய பரிசோதனைகளில் இஸ்ரோ ஈடுபட்டுவருகிறது.
கடந்த ஜனவரி 16 ஆம் திகதி இரண்டு செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டன.
பின்னர் மார்ச் 13 இல் இந்த இரட்டை செயற்கைக் கோள்கள் மீண்டும் பிரிக்கப்பட்டு சோதனை நடந்தது.
இந்நிலையில், இஸ்ரோவின் Space Docking பரிசோதனையின் ஒரு பகுதியாக செயற்கைக் கோள்களை இணைக்கும் பணி வெற்றிகரமாக முடிந்துள்ளது.
இதன்மூலம் இந்தச் சாதனையை நிகழ்த்திய உலகின் நான்காவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது