இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 2,000 ஐத் தாண்டியுள்ளது.
மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதியில் தேசிய தேர்தல் புகார்கள் மையம் மற்றும் மாவட்ட தேர்தல் புகார்கள் மையத்தில் மொத்தம் 2,011 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி, தேர்தல் சட்டங்களை மீறியதாக 130 சம்பவங்களும், தேர்தல் தொடர்பான ஏழு புகார்களும் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.