உலக மக்களையே சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் தான் புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவு. பாப்பரசர் அவருடைய 88 வது வயதில் இன்றைய தினம் காலமானார்.
புனித பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவருடைய எக்ஸ் தளத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது,
“ இலங்கை மக்கள் சார்பாக தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,
அமைதி, இரக்கம் மற்றும் மனிதநேயம் மீதான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உலகில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாப்பரசரின் இரக்கம், நீதி மற்றும் மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் ஆகியவற்றின் மரபு, எதிர்வரும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்” எனப் ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.