ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்றுமாலை இடம்பெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் முக்கியஸ்தருமான சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் சிவஶ்ரீ திவாகரக்குருக்கள் ஆசியுரையை வழங்கினார். அதனைத்தொடர்ந்து வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.
கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் செயலாளர் குரு, கூட்டணியின் பங்காளிக்கட்சிகள்,மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
