அமெரிக்காவின் தன்னிச்சையான வரி அதிகரிப்பை அடுத்து, சீன ஜனாதிபதி தம்முடன் கலந்துரையாடுவதற்கு முன்வருவார் என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பி இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உலக நாடுகள் பலவற்றுக்கான பரஸ்பர தீர்வை வரியை அமெரிக்க ஜனாதிபதி அண்மையில் அறிவித்தார்.
இது நேற்று முன்தினம் முதல் அமுலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், 90 நாட்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் சீனாவுக்கு விதிக்கப்பட்ட வரிகளை 145 சதவீதமாக டொனால்ட் ட்ரம்ப் அதிகரித்துள்ளார்.
இரண்டு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுக்கு இடையிலான வர்த்தக வரிகளை அதிகரித்த நிலையில், அமெரிக்காவின் பொருட்கள் சேவைகள் மீதான வரியை சீனா தற்போது 84 சதவீதமாக நிர்ணயித்துள்ளது
