நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கொழும்பு மற்றும் மலையகத்தை சார்ந்த தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்படி இந்திய வம்சாவளி தமிழர் (IOT) தலைவர்களுடனான சந்திப்பு பலனளித்தது. இந்த சமூகம் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையே ஒரு உயிருள்ள பாலமாக உள்ளது.
இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து IOT களுக்கான 10,000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித தலமான சீதா எலிய கோயில் மற்றும் பிற சமூக மேம்பாட்டுத் திட்டங்களை இந்தியா மேற்கொள்ளும்’ என்று மோடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.