நாடெங்கிலும் இன்றைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாக கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி சப்ரகமுவ, மத்திய, ஊவா, மேல் மற்றும் தென் மாகாணங்களில் மழைவீழ்ச்சி பெய்யும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தென் மாகாணத்திலும், அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதுடன் பலத்த காற்றும் வீசுவதட்கான சந்தர்ப்பமும் அதிகம் உள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக வீட்டில் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.