Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பொருளாதாரம் பற்றி போலி தகவல்களை பரப்பாதீர் – அநுரகுமார திஸாநாயக்க

மார்ச் 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

 

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்குரிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் பற்றி போலி தகவல்களை பரப்ப வேண்டாம், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் எதிரணி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்நாட்டு மக்களை ஒன்றிணைத்து நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு கடந்தகாலங்களில் கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளை ஆட்சியாளர்கள் கைநழுவிவிட்டனர். எமக்கு அதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது. அந்த வாய்ப்பை நாம் தவறவிடமாட்டோம் எனவும் ஜனாதிபதி கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,

கடந்த டிசம்பர் முதலாம் திகதியே வங்குரோத்து நிலையிலிருந்து அதிகாரப்பூர்வமாக நாடு மீண்டது. இதனையடுத்தே நிறுத்தப்பட்டிருந்த வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு ஜப்பான் நடவடிக்கை எடுத்தது.

சீனாவின் 76 வேலைத்திட்டங்களையும் ஆரம்பிப்பதற்கு இணக்கம் எட்டப்பட்டது. அதேபோல இந்திய பிரதமரின் வருகையின் பின்னர் சம்பூர் திட்டம் ஆரம்பமாகும். நாட்டில் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்துவதற்குரிய சமிக்ஞைகளை வெளிப்படுத்தியதால்தான் இதுவெல்லாம் நடக்கின்றது.” என்று குறிப்பிட்டார்.

எமது பொருளாதாரம்மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். எனவே, பொருளாதார ஸ்தீரத்தன்மையையும் ஏற்படுத்த வேண்டும்.

எதிரணிகள் அரசியல் செய்யும் உரிமை உள்ளது. அதற்காக பொருளாதார ஸ்தீரமற்ற தன்மையை ஏற்படுத்தும் வகையில் பொய்யுரைக்ககூடாது. விமர்சனங்களை முன்வையுங்கள். ஆனால் போலி தகவல்களை வெளியிடவேண்டாம்.

அவ்வாறு வெளியிடப்படும் தகவல்களால் பங்கு சந்தையில் தாக்கம் ஏற்படக்கூடும். முதலீட்டாளர்கள் அச்சமடையக்கூடும்.” எனவும் ஜனாதிபதி அநுர குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியம் இல்லாது செய்யப்படும். அதற்குரிய சட்டமூலம் விரைவில் வரும். 10 லட்சமாக உள்ள எம்.பிக்களுக்குரிய காப்புறுதிய இரண்டரை லட்சமாக குறைக்கப்படும்.

தேசிய மக்கள் சக்தியின் பயணத்தைவிடவும் சிறப்பானதொரு மாற்று பயணம் இருந்தால் சொல்லுங்கள், இல்லை. எனவே, எமது பயணத்துக்கு எதிரணிகளுக்கு ஆசிர்வாதம் வழங்குவதைத்தவிர வேறு வழியில்லை. ஊடக கண்காட்சிமூலம் அரசியல் நடத்தலாம் என நினைத்த காலம் மலையேறிவிட்டது. எமது நாட்டில் புதியதொரு அரசியல் கலாசாரத்தை நாம் உருவாக்கிவிட்டோம்.” – என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

முந்தைய செய்தி பசியைத் தூண்டும் வெந்தயக் கீரை …..
அடுத்த செய்தி டொரொண்டோ பல்கலைக்கழக வளாகத்தில் சடலம் மீட்பு !

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சந்தையில் முட்டை விலையில் வீழ்ச்சி !

மார்ச் 29, 2025
இலங்கை

வவுனியாவில் மோட்டர் சைக்கிள் விபத்து – மாணவர் பலி

பிப்ரவரி 6, 2026
அண்மைய செய்திகள்உலகம்

நைஜீரியாவில் எரிபொருள் கொள்கலன் வெடிப்பு – 147 பேர் உயிரிழப்பு

அக்டோபர் 17, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

நெடுந்தீவில் பூதவுடலை கொண்டு செல்லும் படகில் பயணிகளை ஏற்ற முற்பட்டமையால் குழப்பம்!

டிசம்பர் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?