கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்சித் தேர்தலில் மகத்தான வெற்றிக்குப் பிறகு, மார்க் கார்னி பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைச் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு நீண்டதாக இருந்ததாகவும், அன்றைய மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்து அவர்கள் விவாதித்ததாகவும் கார்னி பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் கனடா-அமெரிக்க உறவுகள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பிறவிடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்துள்ளார்
அரசாங்க ஒப்படைப்பு “தடையற்றது” மற்றும் “விரைவானது” என மார்க் கார்னி தெரிவித்தார் , மேலும் அவரது அதிகாரப்பூர்வ பதவியேற்பு குறுகிய காலத்தில் நடக்கும் என்றும் அவர் கூறினார்.
“நல்ல செய்தி என்னவென்றால், நீங்கள் விரும்புவதை விட அதிகமாக என்னைப் பார்ப்பீர்கள்,” என்று அவர் நகைச்சுவையாகக் கூறினார். “நாங்கள் விரைவில் திரும்பி வருவோம்.”எனவும் தெரிவித்தார்
கார்னியின் செய்தித் தொடர்பாளர் பிரதமராக நியமிக்கப்பட்டவர் தனது தனிப்பட்ட ரியல் எஸ்டேட் தவிர தனது அனைத்து சொத்துக்களையும் விழிப்புனற்றவர்களின் அறக்கட்டளைக்கு வழங்கி விட்டதாக இன்று மாலை அறிவித்தார்.
தலைமை வாக்கெடுப்பின் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டபோது கையொப்பமிடப்பட்ட விழிப்புனற்றவர்களிற்கான நம்பிக்கை ஆவணம் நெறிமுறைகள் ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
“நாங்கள் நெறிமுறைகள் ஆணையருடன் தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம், மேலும் முழுமையான மற்றும் வலுவான மோதல் மேலாண்மைத் திட்டத்தை நாங்கள் வழங்கியுள்ளோம்” என்று செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.