Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறிய அரசாங்கம் மாற்றீட்டு சட்டத்தைத் தேடுகிறது – எம்.ஏ சுமந்திரன்

மார்ச் 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

புதிய அரசியலமைப்பு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பேசவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டார்.

கூட்டத்தொடரில் உரையாற்றிய விஜித ஹேரத் காணாமல் போனோர் அலுவலகம்,தேசிய ஒருமைப்பாட்டு அலுவலகம் உள்ளிட்டவை வலுப்படுத்தப்படும் எனக் கூறியிருந்ததாகவும் எனினும் பாதீட்டில் இதற்கென போதியளவு நிதி ஒதுக்கப்படவில்லை என எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார்.

பேச்சளவில் மாத்திரம் இருந்தால் போதாது எனவும் நடைமுறையில் இதனைச் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுவதுமாக நீக்குவோம் என வாக்குறுதியளித்த அரசாங்கம் தற்போது அந்த சட்டத்திற்குப் பதிலாக மற்றுமொரு மாற்றீட்டு சட்டத்தை உருவாக்குவதாக கூறுகிறது எனத் தெரிவித்தார்.

சாட்சியங்களை சேகரிப்பதற்கான நெறிமுறையை ஏற்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நேற்றைய தினம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் கூறினார்.

இது மிகவும் மோசமான விடயம் என சுமந்திரன் குறிப்பிட்டார்.

உண்மையில் யுத்தத்தின் போது என்ன நடந்தது என்பதை அறிவதில் ஆர்வமில்லை அல்லது அதனை மூடி மறைக்க வேண்டும் என்ற வகையிலே இந்த புதிய அரசாங்கமும் செயற்படுவதாக சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் உண்மையின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் உண்மையை மறைத்து எப்போதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது எனக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் இந்த செயற்பாடு தமிழ் மக்களின் அபிலாஷைகளை மூடி மறைக்கும் வகையில் அமைவதாகக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் போக்கைக் கண்டிப்பதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்

முந்தைய செய்தி வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞனின் கைவிரல் துண்டாடப்பட்டுள்ளது…..
அடுத்த செய்தி இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கான பரிசுத் தொகை அதிகரிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பதிவு செய்யப்படாத ஆறு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

செப்டம்பர் 19, 2025
இலங்கை

பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான 19 மாணவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

டிசம்பர் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நுகேகொட பாபியிடம் விசாரணை- தோட்டாக்கள் மீட்பு!

அக்டோபர் 18, 2025
இலங்கை

ஓய்வு பெற்றார் யாழ்.பல்கலை துணைவேந்தர்

மார்ச் 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?