வெலிகம, ஹெட்டி தெருவில் ரயில்வே கடவையில் ரயிலும் காரும் மோதி விபத்திட்க்குள்ளாகியுள்ளது.
இதன்படி வவுனியாவிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற ரயில் மீது காரொன்று மோதி இன்று(01) பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது.
வெலிகம நகருக்கு மேலதிக வகுப்பிற்குச் செல்வதற்காக தாயும் மகளும் பயணித்த கார் ரயில் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த தாயும் மகளும் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.