வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை போராட்டமானது 3000வது நாளான இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் வவுனியா தபால் திணைக்களத்திற்கு அருகில் 3000 நாளாக போராட்டம் மேற்கொள்ளும் கொட்டகைக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளின் உருவப்படத்தினை தாங்கியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளினை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.