பொலன்னறுவை அரலகங்வில வெஹெரகம பகுதியில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான இருவர் உயிரிழந்துள்ளனர்.
72 வயதுடைய ஆண் மற்றும் 75 வயதுடைய பெண் ஆகியோரே இந்த காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த நபர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.