களுத்துறை, பண்டாரகம- கம்மன்பில குளத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து நேற்று சனிக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.
பண்டாரகம அதுன்வென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அவர் பயணித்த கார் வீதியை விட்டு விலகி, மின்சார தூண் ஒன்றுடன் மோதி, சுமார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இதேவேளை, இவ் விபத்தினால் பண்டாரகமவின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், ஒரு மணித்தியாலத்தில் நிலைமையை சீர் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

