கொழும்பு, கொள்ளுப்பிட்டி, ஆர். ஏ. டி மெல் மாவத்தையின், விடுதி ஒன்றில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டினரில் ஒருவரான 27 வயது ஜெர்மன் பெண்ணும் காலமானார்.
நாட்டிற்குப் பிரவேசித்த மூன்று வெளிநாட்டவர்கள் கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ. டி மெல் வீதியில் உள்ள விடுதியொன்றில் கடந்த 30 ஆம் திகதி முதல் தங்கியுள்ளனர். அவர்களில் 30 வயதுடைய ஜேர்மன் பிரஜை ஒருவரும், 27 வயதுடைய அவரது மனைவியும் 24 வயதுடைய பிரித்தானியப் பெண் ஒருவரும் அடங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே விடுதியைச் சேர்ந்த 24 வயது பிரித்தானிய பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த மரணமும் நிகழ்ந்துள்ளது. அவரது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் தம்பதியினர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மற்றுமொரு பெண் நேற்று உயிரிழந்தார். முன்னதாக, நச்சு வாயுவை உள்ளிழுத்ததால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எனினும், விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.