சமூக ஊடகங்களின் பயன்பாடு சிறுவர் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக இலங்கை சமூக மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவரும், ஆலோசகருமான சமூக மருத்துவர் டாக்டர் கபில ஜெயரத்ன, 2024 ஆம் ஆண்டில் 200 இற்கும் மேற்பட்ட குழந்தை தவறான முடிவு எடுக்கும் வழக்குகளின் அடிப்படையில் பதிவாகியுள்ளதாகக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
2022ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 133 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதிகாரப்பூர்வமற்ற தரவுகளின்படி, கடந்த ஆண்டு 270 பேர் தவறான முடிவை செய்து கொண்டனர். இந்த சம்பவங்களுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதற்கு எடுக்கக்கூடிய ஒரு நடவடிக்கை, சமூக ஊடகங்களை ஏதோ ஒரு வகையில் தடை செய்வதாகும். குறித்த விடயம் தொடர்பான தகவல்களை ஓரிரு வாரங்களில் வெளியிடுவோம் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்கள் குழந்தைகள் மீது நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தினாலும், அதன் பயன்பாட்டை சிறப்பாக ஒழுங்குபடுத்துவதற்கான பரிந்துரைகளில் அவர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.