அறிவு ஒளி மையத்தில் இலவசக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இன்றையதினம் திருக்கோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சண்முகம் குகதாசன், திருக்கோணமலை மறைமாவட்ட ஆயர் அருட் கலாநிதி. நோயல் இம்மானுவேல் ஆண்டகை ஆகியோரால் பாடசாலை உபகரணகள் தி/இ.கி.ச. இந்துக் கல்லூரி ஆரம்பப் பிரிவுக் கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கி வைக்கப் பட்டன.
இதன் பொழுது மாணவர்களது கல்வி விழிப்புணர்வு நாடகம், போதைப் பொருள் விழிப்புணர்வு கூத்து, கலாச்சார நடனம் பாடல் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அறிவு ஒளி மையத்தின் நிறுவனர் உதயகுமார் அஜித் குமார், செயலாளர் இளங்கோவன் ஜெயவதனி, பொருளாளர் ஜீவரத்தினம் புகழ் வேந்தன் டிலக்ஷிகா ஆகியோர் இவ் நிகழ்வை ஒழுங்கமைக்க திருமதி.S.மனோகாந்தன் என்பவரால் அனுசரணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் வகாட் நிறுவனத்தின் நிறுவனர் தர்மலிங்கம் கணேஷ், கடற் தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், மகளிர் சங்கங்கள், இளைஞர் சங்கம், அறநெறிப் பாடசாலையைச் சேர்ந்தவர்கள் எனப் நூற்றுக்கும் மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் இந்நிகழ்வில் பங்கு கொண்டனர்.