யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநகரைச் சேர்ந்த இருவரும், பூநகரி மற்றும் மன்னாரை சேர்ந்தவர்களாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் , விசாரணைகளின் பின்னர் அவர்களையும், மீட்கப்பட்ட கஞ்சாவையும் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.