Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

விளைந்த நெல்லை அறுவடை செய்ய விடாதவர்கள் நஷ்ட ஈடு தரவேண்டும் – பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை

ஜனவரி 20, 2025
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் விளைந்த வேளாண்மையை அறுவடை செய்யவிடாது விவசாய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட திகதியில் தான் அறுவடை செய்ய வேண்டும் என சிலர் அமைப்புகள் என்ற பெயரில் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சென்று தடுத்தனர். இதனால் இன்று மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வேளாண்மை வெள்ள நீரில் மூழ்கியுள்ளது இதை தடை போட்டவர்களே இந்த நஷ்டத்தை தர வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சீரற்ற கால நிலை காரணமாக இரு தினங்களாக பெய்துவரும் கனமழையினால் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஊடகங்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) இவ்வாறு தெரிவித்தனர்

2024-2025 ஆண்டு பெரும் போக வேளாண்மை செய்கை தொடர்பாக முன்னோடி கூட்டத்தில் எதிர் வரும் 20ம் திகதி நெல் அறுவடை என தீர்மானிக்கப்பட்டு முடிவு எட்டப்பட்டது இருந்தபோதும் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் அறுவடை செய்யும் நிலையில் வேளாண்மை விளைந்துள்ளதுடன் அறக்கொட்டி பூச்சி தாக்கமும் ஏற்பட்டுள்ளது.

இருந்தபோதும் அனர்த முகாமைத்துவத்தால் எதிர்வரும் 18 ம் திகதியில் இருந்து கனமழை பெய்யும் விவசாயிகள் அவதானமாக செயற்படுமாறு அறிவித்தனர். இதனையடுத்து இரசாங்க அதிபரை சந்தித்து கனமழைவர இருக்கின்றது. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் பாரியளவில் விளைந்த வேளாண்மை மற்றும் அறக்கொட்டி பூச்சி தாக்கம் ஏற்பட்ட வேளாண்மை அறுவடை செய்ய வேண்டியுள்ளது ஆகவே அறுவடையை செய்ய அந்தந்த அமைப்புக்களை தீர்மானித்து முடிவெடுக்குமாறு கேட்டுக் கொண்டோம்.

அதற்கு அரசாங்க அதிபர் வாய்மூலமாக ஒரு உத்தரவு தந்தார். அமைப்புக்கள் ஓம் என்றால் உடனடியாக அறுவடை செய்யுமாறு மழை வெள்ளத்தில் பாதிக்காது செய்யுமாறு தெரிவித்தார். அந்த வகையில் ஒரு விவசாயி அறவடை செய்ததை ஆரம்பித்ததையடுத்து அதனை சிலர் அமைப்புக்கள் என தெரிவித்துக் கொண்டு வேறு பெயர்களை சூட்டிக் கொண்டு பச்சைக்காய்களை வெட்டப் போகின்றார்கள் என பொய்பிரச்சாரத்தை தெரிவித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து அறுவடை செய்வதை தடுத்தனர்.

இதனால் இன்று கனமழை வெள்ளத்தினால் வயல் நிலங்கள் மூழ்கி தண்ணீரில் மிதக்கின்றது விவசாய அமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து கடந்த 10 வருடம் விவசாய அமைப்பு தலைவராக இருந்து சேவை செய்தநான் கடந்த 3 வருடத்திற்கு முன்னர் எனது வயது காரணமாக அதில் இருந்து விலகிவிட்டேன். தற்போது பார்கின்ற போது வேதனையாக இருக்கின்றது. ஒரு தொழிலை செய்யப் போறவன் அந்த தொழிலில் அனுபவம் பெற்றவனாக இருக்கவேண்டும் ஆனால் எதுவுமே தெரியாதவன் ஒரு ஏக்கர் காணி இல்லாதவன் இங்கு வந்து இந்த விவசாயத்தைபற்றி கதைக்கின்றார்களே.

பெரும்போக செய்கை என்பது ஒருவருக்கு முந்தும் ஒருவருக்கு பிந்தும் இருந்தபோதும் விளைந்த வேளாண்மை நிக்காது இந்த மழைகாரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் வேளாண்மை தண்ணீரில் மிதக்கின்றது. அழிவடைந்துள்ளது. அத்துடன் அறக்கொட்டி பூச்சி இருந்தும் விளைந்த வேளாண்மையை வெட்டிக் கொள்ள முடியாத நிலையை சிலர் உருவாக்குகின்றனர். என்றால் இவர்கள் என்ன விவசாயிகள்

மூன்று அழிவு இடம்பெற்றுள்ளது. வெள்ளம், பூச்சி, நேரத்துக்கு வெட்டவில்லை இந்த காரணத்தால் இந்த அழிவு ஏற்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு தீர்மானத்தை மாற்றி தந்திருக்கலாம் விளையாதவர்கள் பிந்தி அறுவடை செய்யமுடியம் ஆனால் அவர்கள் நகரில் இருந்துகொண்டு பச்சைக்காய் என சொல்லிக் கொண்டு எங்களுடைய வாழ்வாதாரத்தை நாசமாக்குகின்ற வேலையை செய்கின்றனர்.

முழு நெல்லும் முளைத்துவிட்டது. இதனை அறுவடை செய்தும் பிரயோசனம் இல்லை இது சாப்பாட்டுக்கும் எடுக்க முடியாது வியாபாரியும் எடுக்க மாட்டான். மனித உரிமையில் முறைப்பாடு செய்தவர்களிடம் இந்த நஷ்டத்தை பெற்றுதரவும்.

அரசாங்க அதிபர் விளைந்த வேளாண்மையை வெட்டுமாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தமாதிரி நாங்கள் வெட்டியிருந்தோம் என்றால் பாதுகாப்பாக நெல்லை எடுத்திருக்கலாம் ஆனால் தற்போது உன்னிச்சைக்குளம் வான்கதவு திறக்கப்பட்டுள்ளது. இதனால் பாரிய அழிவை ஏற்படுத்தவுள்ளது.

விவசாயம் தெரியாத சில வெளிநபர்கள் அமைப்பு என இருப்பவர்கள் தடைபோட்டு எமது வேளாண்மை நாசமாகியுள்ளது. இந்த நஷ்டத்தை அரசாங்கம் எப்படி தரமுடியம் மனித உரிமையில் போய் தடை போட்டவர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இவர்கள் என்ன பதில் சொல்லபோகின்றனர். இவர்களிடம் நஷ்டத்தை வாங்கி தரவும் என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி மன்னார் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் அடம்பனில் சிறப்பாக இடம்பெற்ற பண்பாட்டியல் பொங்கல் விழா.
அடுத்த செய்தி இவ்வருடத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

துருக்கியில் 6.02 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம்

ஏப்ரல் 23, 2025
இலங்கை

கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 32 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில்.கடை உரிமையாளர் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல்!

ஜூன் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

குருவிட்ட பகுதியில் பெண் கொலை குற்றத்தை ஒப்புக்கொண்ட 17 வயது சிறுவன்!

ஜூலை 6, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?