2025 ஆம் ஆண்டு ஆரம்பித்து 20 நாட்களில் 3000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி, மேல்மாகாணத்தில் 1,442 நோயாளர்களும் தென் மாகாணத்தில் 374 நோயாளர்களும் கிழக்கு மாகாணத்தில் 312 நோயாளர்களும் மத்திய மாகாணத்தில் 281 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
குறிப்பாக மேல்மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் டெங்கு நோயால் இருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.