புதிய கல்வியாண்டின் தொடக்கத்தில் மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, பல்வேறு வைரஸ் சுவாச நோய்கள் பாடசாலைகளில் பரவக்கூடும் என்றும் மாணவர்களின் உடல்நிலை குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்துமாறும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சுவாச நோய்களின் அபாயத்தைக் குறைக்க தடுப்பு நடவடிக்கைகளை செயற்படுத்துமாறும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.