அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று(02) ஆரம்பமாகின்றன.
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தமிழ், சிங்கள மொழிமூல பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் கடந்த நவம்பர் மாதம் 22ஆம் திகதி நிறைவடைந்திருந்தது. அதன் பின் 39 நாட்கள் நீண்ட விடுமுறையின் பின்னர் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பமாகின்றன.