Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

சஸ்காட்செவன் மாகாணத்திலும் காட்டுத்தீ ! – மாகாணம் முழுவதும் அவசரகால நிலை பிரகடனம்!

மே 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ளதால், மாகாணம் முழுவதும் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
வடக்குப் பகுதிகளில் வேகமாகப் பரவி வரும் தீ விபத்து காரணமாக ஆயிரக்கணக்கான சஸ்காட்செவன் மாகாண மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அவசரகால நிலை பிரகடனத்தை சஸ்காட்செவன் மாகாணப் பிரதமர் ஸ்காட் மோ செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். அடுத்த 30 நாட்களுக்கு அமலில் இருக்கவுள்ள இந்த அவசரகால நிலையானது, தேவைப்பட்டால் நீட்டிக்கப்படலாம் என்று தெரியவருகின்றது.

கனடாவில் ஒரு மாகாணம் அவசரகால நிலைப் பிரகடனம் செய்வதன் மூலம், மத்திய அரசிடமிருந்து ஊழியர்கள், உபகரணங்கள் மற்றும் ராணுவத்தின்
பயன்பாடு உட்பட கூடுதல் வளங்களை பெற முடியும். சஸ்காட்செவன் மாகாணத்தில் 17 காட்டுத்தீ சம்பவங்கள் நடந்ததாகவும், அவற்றில் மூன்று மட்டுமே கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கியூபெக் (Quebec) மற்றும் அலாஸ்காவிலிருந்து சென்றுள்ள (Alaska)
விமானங்கள் தற்போது சஸ்காட்செவனில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

நோவா ஸ்கோஷியா (Nova Scotia) மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவிலிருந்து (Prince Edward Island) மேலதிக தீயணைப்புப் படையினர் சஸ்காட்செவன் மாகாணம் நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவகையான காட்டுத்தீப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள மற்றொரு கனேடிய மாகாணமான மனிடோபாவின் முதல்வர் வாப் கினேவுடன் (Wab Kinew), சஸ்காட்செவன் மாகாண முதல்வர் கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
இரு மாகாணங்களும் எவ்வாறு ஒருவருக்கொருவர் உதவ முடியும் என்று ஆராய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக்கில் புதியதாகக் குடியேறினால், கலாசாரம் மற்றும் விழுமியங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற சட்டமூலம்…., நிறைவேற்றம்!
அடுத்த செய்தி பேருந்தும்,பாரவூர்தியும் மோதி விபத்து !

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை பார்வையிட்ட இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள்….

மார்ச் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம் – இரு உறுப்பினர்களுக்கிடையில் கடும் விவாதம்

மார்ச் 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நான்கு இலங்கையர்கள் கைது!

ஜூலை 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு!

நவம்பர் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?