வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்தும் பாரவூர்தியும் மோதிய விபத்துச்சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (29) இரவு இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வீதியின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் பின்புறத்தில் பாரவூர்தி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது .
இவ்விபத்தில் காயமடைந்த மூவரும் தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக இடம் மாற்றப்பட்டு ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
