இலங்கையில், 2025ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து மே மாதம் 25 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் மாத்திரம் வீதி விபத்துக்களால் 1062 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு அவர் மேலும் கூறுகையில், “இந்தக் காலப் பகுதியில் மாத்திரம் நாட்டில் 1003 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன எனவும் இந்த வீதி விபத்துக்களினால் சுமார் 7000பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மாத்திரம் வீதி விபத்துக்களால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.” எனவும் அவர் கூறியுள்ளார்.
