Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தவறான தகவல் வழங்கிய தேசிய புலனாய்வு சேவை பிரிவு உத்தியோகத்தர் கைது…

ஏப்ரல் 9, 2025
வவுணதீவு
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் கொலை செய்த சம்பவத்தை சரியான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளாது பிழையான தகவலை வழங்கிய மட்டு கரடியனாறு தேசிய புலனாய்வுத்துறை சேவை பிரிவில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை சிஜடி யினர் கொழும்பில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு (08) கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

இதுபற்றி தெரிய வருவதாவது

கடந்த 2018 நவம்பர் 29 ம் திகதி வவுணதீவு வலையிறவு பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருந்த பொலிஸ் சாஜன் நிரோசன் இந்திர பிரசன்னா, மற்றும் பொலிஸ் கொஸ்தாபல் டினேஸ் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் கொலை செய்து அவர்களின் கைது துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர்

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் விடுதலைப்புலிகளில் இருந்து புனர்வாழ்வு பெற்று வெளிவந்த அஜந்தனின் ஜக்கட் பாலத்தின் கீழ் வீசி எறிந்து கிடப்பதாகவும், அவர் இந்த படுகொலையை செய்ததாக அறிக்கையிட்டதையடுத்து அவரை பொலிசார் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியை கொழும்பிலுள்ள சிஜடி நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் 2019 ஏப்பிரல் 21 உயித்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஸக்ரானின் குழுவைச் சேர்ந்த கபூர் மாமா என அழைக்கப்படும் ஸக்ரானின் சாரதியான முகமது சர்ப் ஆதம்லெப்பை, மில்ஹான், பிறதோஸ். நில்காம் 4 பேரை கைது செய்ததன் பின்னர் அவர்கள் தான் இந்த படுகொலையை செய்துள்ளதாக தெரிய வந்ததையடுத்து கைது செய்யப்பட்ட முன்னாள் பேராளியை விடுதலை செய்தனர்.

இதனையடுத்து தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியதையடுத்து இந்த உயிர்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுத்த நிலையில் இந்த பொலிசார் படுகொலைச் சம்பவத்தின் உண்மை சம்பத்தை மூடிமறைக்கப்பட்டு விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மீது சுமத்தப்பட்டதை கண்டறிந்தனர்.

இதனுடன் தொடர்புபட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றி வரும் தேசிய புலனாய்வு சேவையைச் சேர்ந்த இருவரையும் சிஜடி யினர் வரவழைத்து அவர்களிடம் விசாரணையை முன்னெடுத்த நிலையில், மட்டக்களப்பு கரடியனாறு தேசிய புலனாய்வு சேவை பிரிவில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தரை நேற்று செவ்வாய்க்கிழமை (8) கொழும்புக்கு வரவழைத்த சிஜடி அவரை அங்குவைத்து கைது செய்துள்ளனர்.

முந்தைய செய்தி மாட்டினை மீட்க கொட்டும் மழையில் போராடிய பெண்…
அடுத்த செய்தி மக்களின் போராட்டத்தினை தொடர்ந்து கசிப்பு வியாபாரிகளின் வீடுகள் முற்றுகை…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் பேருந்தில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

டிசம்பர் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போலி சாரதி அனுமதிப்பத்திர மோசடி தொடர்பில் வெளியான தகவல்!

டிசம்பர் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சஜித்தை டெல்லிக்கு அழைத்தார் மோடி ….

ஏப்ரல் 13, 2025
இலங்கை

வடக்கில் சில உள்ளூராட்சி மன்றங்கள் பின்தங்கிய வருமான நிலையில் உள்ளன – ஆளுநர் நா.வேதநாயகன்

மார்ச் 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?