Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

நேபாளத்தில் பேரழிவு: மரக் கிளையைப் பிடித்து உயிர்தப்பிய தொழிலாளி

ஆகஸ்ட் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நேபாளத்தில் நிலச்சரிவுடன் கூடிய பெருவெள்ளம் நாட்டின் திபெத் எல்லைப் பகுதியான ரசுவா மாவட்டத்தில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலையிலிருந்து பாய்ந்து வந்த மண் மற்றும் பாறைச் சுவர்கள் ஆற்று நீரில் சரிந்து விழுந்ததால், பாய்ந்த அசுர வெள்ளத்தில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த பேரழிவில் பிதுர் பகுதியில் கழிப்பறை குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 24 வயதான பிபேக் குமால் என்ற கூலித்தொழிலாளி சீறிப் பாய்ந்து வந்த சேற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளத்தில் கட்டுக்கடங்காமல் அடித்துச் செல்லப்பட்ட பிபேக், வழியில் இருந்த ஒரு மாமரத்தின் கிளையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு பல மணி நேரம் மரத்திலேயே தங்கிப் போராடியுள்ளார்.

பின்னர் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு காத்மாண்டு தேசிய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்ட அவர், “அந்த மாமரம் மட்டும் அங்கில்லை என்றால் நான் நிச்சயமாக உயிருடன் இருந்திருக்க முடியாது” என உருக்கமாகக் கூறியுள்ளார்.

தற்போது வெள்ளப் பாதிப்புகளில் 114-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் பாதுகாப்புப் படையினரும் மீட்புக் குழுவினரும் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி நேபாளத்தில் தொடரும் இயற்கை சீற்றம்: ரசுவா பகுதியில் 5.2 ரிக்டர் நிலநடுக்கம்
அடுத்த செய்தி கான்பூரில் பயிற்றுவிப்பாளர் விமானம் விபத்து

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

மகிழுந்துகளுக்கான விலையை அதிகரிக்கக் கூடாது – ட்ரம்ப் எச்சரிக்கை

மார்ச் 29, 2025
உலகம்

காதலனை கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு.

பிப்ரவரி 3, 2025
உலகம்

ஐரோப்பாவில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!

ஆகஸ்ட் 15, 2025
உலகம்

வடகொரியாவின் 81-வது விடுதலை நாள்: தேசோங்சான் தியாகிகள் நினைவிடத்தில் அதிபர் கிம் ஜோங் உன் மலரஞ்சலி

ஆகஸ்ட் 15, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?