நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலினால் கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். படகுகள் வலைகள் அழிவடைந்தன. அரசாங்கம் அவற்றிற்கான இழப்பீடுகளை வழங்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ள நிலையில், இன்றைய தினம் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகள் வழங்கும் நிகழ்வு கடற்றொழில் திணைக்கள மாவட்ட அலுவலகத்தில் கடற்றொழில் திணைக்கள மாவட்ட உதவிப்பணிப்பாளர் வி.கலிஸ்ரன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கலந்து கொண்டு மீனவர்களுக்கு வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் ம.மோகன், திணைக்கள உத்தியோகத்தர்கள், மீனவர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.
இதன்போது 73 மீனவர்களுக்கு வலைகளும் 02 மீனவர்களுக்கு படகும் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட ஏனைய மீனவர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படவுள்ளது.
