மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 13 வயது சிறுமி ஒருவரை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜ.ஆர்.சி பட்டியலில் உள்ள பிரபல போதை பொருள் வியாபாரியான 31 வயதுடையவரை எதிர்வரும் 20 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று புதன்கிழமை (8) உத்தரவிட்டார்.
குறித்த நபரின் வீட்டுக்கு அருகாமையில் உள்ள வீட்டில் வசித்து வரும் 13 வயது 4 மாதங்களை கொண்ட சிறுமியின் தந்தை மதுபானம் அருந்திவிட்டு வீட்டிற்கு சென்று மனைவி பிள்ளைகளுடன் தகராறு காரணமாக குறித்த சிறுமியை தாய் தந்தை ஒழுங்காக பராமரிக்காத நிலையில் சிறுமி சில சமயம் உறவினரான ஜ.ஆர்.சி வீட்டிற்கு சென்று தங்கி வருவது வழமை.
இந்நிலையில் சம்பவ தினமான 6ம் திகதி திங்கட்கிழமை இரவு குறித்த நபரின் தாயாருடன் அங்கு நித்திரைக்கு சென்றுள்ளார். இதன்போது நள்ளிரவு 12 மணிக்கும் அதிகாலை 2 மணிக்கும் இடையில் சிறுமியை தன்னுடன் வருமாறு குறித்த நபர் கேட்டபோது சிறுமி பயந்து அலற முற்பட்டபோது சிறுமியின் வாயை கைகளால் மூடி சிறுமியை தூக்கி சென்று வீட்டிற்கு பின்பகுதியிலுள்ள பாழடைந்த காணி ஒன்றின் கம்பி வேலியால் சிறுமியை தூக்கி விட்டுவிட்டு குறித்த நபர் கம்பி வேலியை கடக்க முற்பட்ட போது சிறுமி அங்கிருந்து தப்பி ஓடி சத்தமிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து சிறுமியை மீண்டும் பிடித்து வாயை மூடி குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொண்டதையடுத்து சிறுமி தனக்கு நடந்த கொடூரத்தை பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் பெற்றோர் குறித்த நபரின் உறவினர் என்பதால் அதனை மூடி மறைத்ததுடன் பொலிசாருக்கு புகார் தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.
இதனையறிந்த அந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் 1195 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்ததையடுத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கஜநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை (7) இரவு குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே போதைப்பொருள் வியாபாரம் உட்பட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளி வந்துள்ளதுடன் பொலிசாரின் நாட்டில் குற்றவாளிகள் உள்ள குற்றவாளிகள் பட்டியலான ஜ.ஆர்.சி பட்டியலில் சேர்க்கப்பட்ட குற்றவாளியான குறித்த நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (8) ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 20 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

