மாரவில பகுதியை சேர்ந்த 14 வயதான சிறுமியை 17 வயது சிறுவன் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் கருத்து தெரிவிக்கையில்,
டிக்டோக் சமூக வலைத்தளம் ஊடாக குறித்த இருவரும் நட்பாக பேசி வந்த நிலையில், அது காலப்போக்கில் காதல் உறவாக மாறியுள்ளது.
இந்நிலையில் அச்சிறுவன் சிறுமியின் வீட்டிற்கு சென்று தங்கியிருந்த போது அவரை துஷ்பிரயோகம் செய்ததுடன், புத்தளம் பகுதியில் உள்ள சிறுமியின் சகோதரியின் வீட்டில் வைத்து இரண்டாவது முறையாகவும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

