ஒட்டாவாவில் நடைபெற்ற அமெரிக்க சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு, ராயல் கனடியன் ஏர் ஃபோர்ஸ் மற்றும் அமெரிக்க விமானப்படை இணைந்து வானில் கூட்டாக பறந்தது
இந்த நிகழ்வில் அமெரிக்க தூதர் பீட் ஹூக்ஸ்ட்ரா கலந்து கொண்டு, கனடா இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க தயாரிப்பு F-35 போர் விமானங்களின் “உரிமையாளர்களாக” மாறும் என தெரிவித்தார்.
குறித்த நிகழ்வின் போது, இரண்டு அமெரிக்க F-35 விமானங்களும் இரண்டு கனடிய CF-18 விமானங்களும் குறைந்த உயரத்தில் ஒட்டாவா வானில் பறந்து காட்சியளித்தன.
அமெரிக்கா தனது 250வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் இந்த கூட்டுப் பறப்பு நடைபெற்றது.
கனடா அரசு தற்போது 88 F-35 விமானங்களை வாங்கும் திட்டத்தை மீளாய்வு செய்து வருகிறது. இதற்கிடையில் ஏற்கனவே 16 விமானங்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க தூதர், NORAD அமைப்பு மூலம் இரு நாடுகளும் கடந்த பல தசாப்தங்களாக பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.
அதே நேரத்தில், கனடா–அமெரிக்கா இடையிலான வர்த்தக சிக்கல்கள் மற்றும் சில திட்டங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் இன்னும் நிலவுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், இரு நாடுகளும் எதிர்காலத்தில் மேலும் வலுவான உறவை உருவாக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

