நாட்டில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி பாடசாலைகள் , முன்பள்ளிகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும் இது தொடர்பிலான சுற்றறிக்கை அனைத்து மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நீர் தேங்கி நிற்கும் இடங்களை கண்டறிந்து அதனை அழிப்பதுடன், டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது.


