வலி. வடக்கில் காணிகளை விடுவிக்குமாறு பலாலி சந்தியிலும் இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் தங்களை மீள் குடியமர்த்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்ததுடன், பலாலி உதயகலைவாணி மக்கள் ஒன்றியத்தினால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


