முள்ளிவாய்க்கால் மண்ணில் சிந்திய இரத்தத்திலிருந்து உணர்வலைகளாக இளைஞர்கள் எழுந்து வருகிறார்கள் என்று, தமிழ்நாட்டின் சமூகநலத்துறை அமைச்சரும், விடுதலைச் சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
சொல்லிசைப் பாடகர் சங்கீதன் கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
கோவில் திருவிழாக்கள் மற்றும் பொது விழாக்களில் தமிழ்த் தேசிய எழுச்சிப் பாடல்களை பாடி இளைஞர்களை அரசியல்படுத்தி வருபவர் சங்கீர்த்தனன் என்று தெரிவித்த வன்னி அரசு, இதை பொறுக்க முடியாத இலங்கை அரசாங்கம், பாடகர் சங்கீர்த்தனை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்து பண்ணையடி சிறைச்சாலையில் அடைத்திருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என அவர் கூறியுள்ளார்.
சங்கீர்த்தனனை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்திருப்பது, சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒடுக்குமுறை இன்னும் தொடர்வதன் சாட்சியம் என, வன்னி அரசு விமர்சித்துள்ளார்.
இடதுசாரி அரசியலை முன்னெடுப்பதாக சொல்லி உலக அரங்கில் மக்களை ஏமாற்றி வரும் போக்கைத் தான் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி அரசு செய்து வருகிறது எனவும், தமிழக அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார்.


