வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினால் 17வது முள்ளிவாய்க்கால் நினைவு தின அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் வவுனியாவில் இடம்பெற்றிருந்தது.
வவுனியா ஏ9 அஞ்சல் திணைக்களத்தின் முன்பாக 3375வது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை உறவுகளினால் பந்தல் அமைத்து போராட்டம் நடாத்தி வரும் பந்தலிற்கு முன்பாகவே குறித்த அஞ்சலி நாகழ்வு இடம்பெற்றிருந்தது.
இதன் போது தீபமேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்காலில் 2009ம் ஆண்டு கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
