கிளிநொச்சி, முறிகண்டிப் பகுதியில் இன்று வியாழக்கிழமை (16) இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒரு தம்பதி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரதக் கடவையை கடக்க முயன்ற கார் ஒன்று, புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், அந்தக் காரில் பயணித்த தம்பதியினர் காயமடைந்துள்ளனர்.
விபத்து ஏற்பட்ட உடனேயே அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து, காரில் சிக்கியிருந்த தம்பதியினரை மீட்டு, உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக அப்பகுதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
