கடந்த 04ம் திகதி வடமராட்சி அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்த தகவலின் படி 4 லட்சம் ரூபா பெறுமதியான (சந்தை விலை) Pregabalin எனப்படும் 520 போதை மாத்திரைகளுடன் கரணவாய் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய பிரபல போதைப்பொருள் வியாபாரியை நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
