இராமநாதபுரம் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றிரவு 24.09.2025இரவு 6.30 மணி அளவில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 6ம் யூனிட் இராமநாதபுரம் ஆலடி பகுதியில் தப்பிச்செல்ல சந்தேக நபர் ஒருவர் முற்பட்டுள்ளார்.
இதன்படி கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக அந்த நபர் உயிரிழந்துள்ளார். அதே பகுதியைச்சேர்ந்த 24வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
