Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சட்டவிரோத கனியவள அகழ்வை அறிய புதிய முயற்சி

மார்ச் 29, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

வடக்கில் கனிய வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தடயறி (GPS) ஊடாக கண்காணிக்கும் பொறிமுறையை விரைவில் அமுல்ப்படுத்தவுள்ளதாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரும் , மாநகர சபை உறுப்பினருமான எஸ்.கபிலன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் சட்டரீதியற்ற முறையில் வள சுரண்டல்கள் இடம்பெற்று வருகிறது. அதனால் பல உயிர்கள் கூட காவு வாங்கப்பட்டுள்ளது. கனிய வள கடத்தல்களால் பல விபத்துக்கள் கூட சம்பவித்துள்ளன.

இவ்வாறான உயிர்களை காவு வாங்கும் செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிக்க முடியாது. இதனால் இரவு வேளைகளில் கனிய வளங்களை எடுத்து செல்லல் , வெளி மாவட்டங்கள் , மாகாணங்களில் இருந்து கனிய வளங்களை கொண்டு வருவதனை ஒழுங்குபடுத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

அதேவேளை கனிய வள திணைக்களத்தால் வழங்கப்படும் அனுமதிகள் தொடர்பில் காவல் துறையினர் , எமது விசேட குழு உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும். அதனூடாக மக்களுக்கும் தகவல்கள் தெரியப்படுத்தப்படும் என தெரிவித்தனர்.

அவ்வாறு தகவல்கள் பொது வெளிகளில் தெரியப்படுத்தப்படும் போது, கனிய வள திருட்டுக்கள் , சுரண்டல்களை கட்டுப்படுத்த முடியும். சட்டவிரோதமாக கனிய வளங்களை கொண்டு செல்வோர் தொடர்பில் மக்கள் அறிந்து அறிவிக்க முடியும் மக்களின் பங்களிப்பு தான் இந்த விடயத்தில் மிக முக்கியம்.

கனிய வள தேவையுடையோர் மாவட்ட செயலர்கள், பிரதேச செயலர்கள் ஊடாக விண்ணப்பித்து அதனை பெற முடியும். அதனூடாக மணல் கடத்தல்களை கட்டுப்படுத்த முடியும் என்பதுடன் மக்கள் நியாய விலைகளில் மணலை பெற்றுக்கொள்ள முடியும்

அத்துடன் கனிய வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு தடயறி (GPS) பொருத்தி அதனை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்குள் எண்ணிய நடைமுறைகள் ஊடாகவே கனிய வள விநியோகம் ஒழுங்குபடுத்தப்படும். அதனூடாக சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி விண்வெளிக்கு பயணமாகும் ஜென்னி கிப்பன்ஸ்
அடுத்த செய்தி பா.உ.அருச்சுனாவிற்கு எதிராக சான்றுரைத்த வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தமிழரசு கட்சியின் அரசியற்குழு கூட்டம்

ஆகஸ்ட் 2, 2025
இலங்கை

யாழில். அடாவடியில் ஈடுபட்ட மாநகர சபை உத்தியோகஸ்தர்கள்.

பிப்ரவரி 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நானுஓயாவில் முச்சக்கரவண்டி விபத்து!

ஜூன் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

குற்றச் செயல்களில் தொடர்புடைய 15 பேர் கைது!

செப்டம்பர் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?