தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் தின நிகழ்வு யாழ். நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் மேனகா சிவகரன், வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளர் தவமலர் சுரேந்திரநாதன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், சட்டத்தரணிகள் காண்டீபன், சுகாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இதன் போது மகளிர் கழகங்களில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மகளுருக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், பல்வேறு கலை நிகழ்வுகளும் விழிப்புணர்வு மேடை நாடகமும் இதன்போது இடம்பெற்றது.
