நாட்டில் எரிவாயுவிற்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பிலான கருத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி எரிவாயு களஞ்சியப்படுத்தும் வசதிகள் சற்று குறைவாக உள்ளதே இவ்வாறான நெருக்கடிக்கு காரணம் என அவர் பதிலளித்துள்ளார்.
இலங்கையை பொறுத்தவரை 8000 மெட்ரிக் டன்கள் மாத்திரமே களஞ்சியப்படுத்த கூடியதாக உள்ளதுடன், நாள் ஒன்றுக்கு 1000 தொடக்கம் 1200 டன் மெட்ரிக் எரிவாயு
தேவைப்படுவதாக அறிவித்துள்ளார்.
மாலைத்தீவில் இருந்து சிறிய கப்பல்கள் ஊடாக 8000 மெட்ரிக் டன் எரிவாயு கொண்டு வரப்படுவதாக கூறினார்.
மேலும் இவ்வாறான நெருக்கடிகளுக்கு அரசாங்கம் தீர்வு காணும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
