ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், 07 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 29 ஆம் திகதி பேலியகொடை பகுதியில் 04 கிலோ 423 மில்லிகிராம் கொக்கேய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
குறித்த கடத்தல் சம்பவத்துடன் ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா தொடர்புப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இவர் தொடர்பில் பலதரப்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் அனைத்தையும் விசாரணைகள் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
