இலங்கை அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனம் இவ்வாண்டுக்கான புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் இந்த ஆண்டுக்கான 10 புதிய மருந்து தயாரிப்புக்களையும், சுமார் 4,000 மில்லியன் மாத்திரைகள் மற்றும் வில்லைகளை உற்பத்தி செய்யவும் எதிர்பார்த்துள்ளதாகவும் அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தற்போது 70 வகையான மருந்து தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது.
இதன்படி 2025 ஆம் ஆண்டை பொறுத்தவரை 3,625 மில்லியன் மாத்திரைகள் மற்றும் வில்லைகளை உற்பத்தி செய்து உயர்ந்த மருந்து உற்பத்தியை அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனம் பதிவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு ஐந்து புதிய மருந்து தயாரிப்புகள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதோடு, அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் மொத்த வருமானம் ரூ. 27.06 பில்லியனாக பாதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
