கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியிலிருந்து சட்ட விரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி மணல் அகழ்வில் ஈடுபட்டு பயணித்த டிப்பர் வாகனம், பொலிசாரின் சமிக்கியை மிறிச்சென்றதால் பொலிசாரால் துப்பாக்கிச்சூடு மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த டிப்பர் வாகனத்தை நிறுத்தாமல் உள்ளக வீதியூடாக தப்பிச்செல்ல முற்பட்ட வேளையிலேயே இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டிப்பர் வாகனம் குடை சாய்ந்துள்ளது.
இச்சம்பவத்தின் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசாரால் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.