ஒட்டாவாவில் உள்ள பில்லிங்ஸ் பிரிட்ஜ் (Billings Bridge) போக்குவரத்து நிறுத்தத்தில் பல நபர்கள் மீது நடத்தப்பட்ட “வெறுப்புத்” தாக்குதல் தொடர்பாக மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெறுப்பு சொற்களை பயன்படுத்தியதாகவும், தாக்குதலின்போது இரண்டு ஸ்டன் துப்பாக்கி கருவிகளைப் பயன்படுத்தியதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தாக்குதல் பற்றிய அழைப்பு வந்தவுடன், காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
அங்கு, இந்த சந்தேகநபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்கள் மீது வெறுப்புச் சொற்களை வீசிக்கொண்டிருப்பதை, அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திலேயே மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் இளம் வயதின் காரணமாக, ஒட்டாவா காவல்துறை அவர்களின் பெயர்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
