வவுனியா பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் தொடர் கல்விக்கான நிலையத்தின் ஊடாக நடாத்தப்படும் ஆரம்ப பிள்ளைப்பருவ கல்வி டிப்ளோமா கற்கைநெறி – பிரிவு II இன் ஆரம்ப விழா வவுனியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் ஏ. அற்புதராஜா, தொலைதூர மற்றும்
தொடர்கல்விக்கான நிலையத்தின் பணிப்பாளர் திரு. எஸ். ஏ. ஜூட் லியோன், கல்வி மேம்பாட்டு
கூட்டமைப்பின் தலைவர் பொறியியலாளர் எம். சூரியசேகரம், வவுனியா வடக்கு உதவி கல்வி
பணிப்பாளர் (முன்பள்ளி) முரளிதரன், பாட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்.சண்முகதாசன் மற்றும் தொலைதூர மற்றும் தொடர்கல்விக்கான நிலையத்தின் உதவிப் பதிவாளர் திருமதி. யூ.
விதுஷனா ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வானது, தங்கள் கல்வித்
துறையில் புதிய கல்விப் பயணத்தைத் தொடங்கும் ஆரம்ப பிள்ளைப்பருவ டிப்ளோமா
கற்கைநெறியின் பிரிவு II இன் மாணவர்களுக்கு ஒரு ஊக்கமளிக்கும் தொடக்கமாக அமைந்தது.
இதேவேளை திறமையான மற்றும் இரக்கமுள்ள ஆரம்ப பிள்ளைப்பருவ டிப்ளோமா கற்கைநெறியின் சிறந்த
கல்வியாளர்களாக மாறுவதற்குத் தேவையான அறிவு, திறன்கள் மற்றும் நடைமுறை
அனுபவத்துடன் மாணவர்களை சிறப்பாக்குவதற்காக குறித்த திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
