தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம், தொழிலாளர் போராட்ட நிலையம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்துக்கு முன்னால் சத்தியாகிரகத்தை ஆரம்பித்துள்ளன.
இந்தப் போராட்டம் காரணமாக, இன்று காலை முதல் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தைச் சுற்றி விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொதிகளை அனுப்பத் தயாராகும் ஊழியர்களின் கடமைகளுக்கு சில குழுக்கள் இடையூறு விளைவித்ததை அடுத்து, பொலிஸார் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தாமல் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு அகில இலங்கை பிரதி தபால் ஊழியர்கள் சங்கத்தின் பொருளாளர் ரவீந்திர அமரஜீவ, சக தொழிற்சங்க பிரதிநிதிகளை வலியுறுத்தியுள்ளார்.
இன்று பணிக்கு வராத அனைத்து தபால் ஊழியர்களும் தங்கள் பதவிகளை விட்டு வெளியேறியதாகக் கருதப்படுவார்கள் என்று தபால் மா அதிபர் ருவன் சத்குமார அறிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
