வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கான கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
பாடசாலை மட்டங்களிலே கிரிக்கெட்டினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் வவுனியா துடுப்பாட்ட சங்கம் இணைந்து குறித்த செயற்திட்டத்தினை முன்னெடுத்திருந்தது.
இதன்போது 130 வீர, வீராங்கனைகளிற்கு காலணிகளும், இரு பாடசாலைகளிற்கு 32 காலணிகளும், மேலும் ஐந்து பாடசாலைகளிற்கு தலா 250,000 ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
வடமாகாண துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் யோ.ரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் தே.கமலன் மற்றும் கிரிக்கெட் பயிற்சியாளர்கள், சங்க முக்கியஸ்தர்கள், அதிபர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
